search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை கடை"

    • சபரி சங்கர் சேலம் சீலநாயக்கன்பட்டி, ஆத்தூர், அம்மாபேட்டை, நாமக்கல் , திருச்செங்கோடு, கரூர், திருச்சி, கோவை உள்பட 11 இடங்களில் நகைக்கடை நடத்தி வந்தார்.
    • 11 கடைகளிலும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம ரூ.200 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது

    சேலம்:

    சேலம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் சபரி சங்கர். இவர் சேலம் சீலநாயக்கன்பட்டி, ஆத்தூர், அம்மாபேட்டை, நாமக்கல் , திருச்செங்கோடு, கரூர், திருச்சி, கோவை உள்பட 11 இடங்களில் நகைக்கடை நடத்தி வந்தார்.

    மேலும் 100-க்கும் மேற்பட்ட ஏஜென்சி அலுவலகம் நடத்தி தங்க நகை சேமிப்பு திட்டம், முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, பொங்கும் தங்கம், பழசுக்கு புதுசு என்ற திட்டத்தில் பழைய தங்கத்துக்கு மாற்றாக புதிய தங்கம் என பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வாடிக்கை யாளர்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்தார்.

    இதில் 11 கடைகளிலும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம ரூ.200 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் அந்தந்த மாவட்டங்களில் புகார் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ளனர்.

    தங்க நகை கடை உரிமையாளர் சபரி சங்கர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார் . மேலும் அந்த கடையில் பணிபுரிந்த மேலாளர், மாவட்ட அளவிலான அதிகாரிகள் உள்ளிட்ட நிர்வாகிகளும் தலைமறைவாகியுள்ளனர்.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அந்த நகைக்கடையின் மாவட்ட மேலாளர், மண்டல மேலாளர் உள்பட 14 பேரை அந்த நிறுவனத்தின் சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், கோவை, தர்மபுரி மாவட்ட மார்க்கெட்டிங் ஏஜெண்டு களே பிடித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள போலீசாரிடம் இன்று ஒப்படைத்தனர்.

    இது பற்றி மார்க்கெட்டிங் ஏஜெண்டுகள் கூறிய தாவது:-

    பொதுமக்களிடம் நாங்கள் எஸ்.வி.எஸ் தங்க நகை நிர்வனம் அறிவித்தபடி பழைய தங்கத்திற்கு மாற்றாக புதிய தங்கம், முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, தங்க நகை சேமிப்பு திட்டம் என பல்வேறு வழிகளில் பணத்தை வசூல் செய்து கடையில் கட்டினோம்.

    ஆனால் தற்போது இந்த நகைக்கடையை பூட்டிவிட்டு உரிமையாளர் தலைமறை வாகிவிட்டார் . மேல்மட்ட அதிகாரிகள் அந்த நகை கடையில் உள்ள தங்க கட்டிகள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர். அவர்களில் சிலரை பிடித்து சேலம் கலெக்டர் அலுவலக போலீ சிடம் ஒப்படைத்துள்ளோம்.

    நாங்கள் பொதுமக்களிடம் பணம் நேரடியாக வசூல் செய்ததால் எங்களை வீட்டில் இருக்க விடாமல் பொதுமக்கள் விரட்டுகின்றனர். இதனால் நாங்கள் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனவே மாவட்ட அளவிலான அதிகாரி களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினால் உரிமையாளர் சபரி சங்கர் எங்கு இருக்கிறார்? என்பது தெரியவரும்.

    உடனடியாக அவரை பிடித்து பொதுமக்களின் பணம் மற்றும் நகையையும் மீட்டு தர வேண்டும். அப்படி கொடுக்காவிட்டால் நாங்கள் நிம்மதியாக வீட்டில் இருக்க முடியாது. எனவே எங்களுக்கு அந்த பணத்தை உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    அப்போது அவர்களுடன் வந்த பணம் கட்டி ஏமாந்த வாடிக்கையாளர்கள் கூறு கையில், ஒவ்வொருவரும் 4 லட்சம் முதல் 10 லட்சம் வரை பணம் கட்டியதாகவும் தற்போது பணத்தை இழந்து நடுத்தெருவில் இருப்பதா கவும் இதனால் திருமணம் போன்ற முக்கிய காரியங்கள் நடத்த முடியாமல் தவிப்பதாகவும் கூறினர்.

    தங்களது பணத்தை மீட்டு தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர் விட்டு கதறியபடி பெண்கள் புகார் கூறினார்.

    தொடர்ந்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட தங்க நகை நிறுவனத்தின் அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தீபாவளி சீட்டு மற்றும் தங்க நகை திட்டங்களை அறிவித்து மோசடி செய்து ஏமாற்றிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
    • கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களையும் அவர்களது செல்போன் எண்களை வைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி மற்றும் அம்மாபேட்டை சிங்கமெத்தை பகுதியில் வீராணம் அருகே உள்ள வலசையூர் பகுதியை சேர்ந்த ஒருவர் நகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் தீபாவளி சீட்டு நடத்தியும், மேலும்தங்க நகை சேமிப்பு திட்டம் மற்றும் தங்க நகை முதலீடு போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களிடம் லட்சகணக்கில் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடை உரிமையாளர் திடீரென தலைமறைவானார். உரிமையாளர் கடையை திறக்க வராததால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சம்பளம் வரும் என எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் ஏமாற்றம் அடைந்ததால் இதுகுறித்து நேற்று மாலை அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

    இதனிடையே சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கடை பூட்டிய நிலையில் இருப்பதால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் கடை முன்பு இன்று காலை முதலே திரண்டனர். பின்னர் தீபாவளி சீட்டு மற்றும் தங்க நகை திட்டங்களை அறிவித்து மோசடி செய்து ஏமாற்றிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். சிலர் கடை மீது கல்வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு வரும் வாடிக்கையாளர்களையும் அவர்கள் சமரசப்படுத்தி வருகிறார்கள்.

    கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களையும் அவர்களது செல்போன் எண்களை வைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கடையின் உரிமையாளர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கவர்ச்சி திட்டங்கள் மூலம் பல கோடி வசூல் செய்து பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திலும் முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்து உள்ளதால் போலீசார் சபரிசங்கரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பொதுமக்கள் ஏராளமானோர் மாதம் பணம் செலுத்தி வந்தனர். சிலர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தினார்கள்.
    • நகைக்கடை பராமரிப்பு பணி நடைபெறுவதால் மூடப்பட்டு இருப்பதாக அறிவிபபு

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் மாதம் மாதம் பணம் கட்டினால் ஆண்டு இறுதியில் செய்கூலி சேதாரம் இல்லாமல் நகைகள் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை நம்பி பொதுமக்கள் ஏராளமானோர் மாதம் பணம் செலுத்தி வந்தனர். சிலர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தினார்கள்.

    இந்த நிலையில் நகை கடை மூடப்படுவதாக தகவல் பரவியது. இதையடுத்து பணம் செலுத்திய ஏராளமான பொதுமக்கள் இன்று காலை கடையின் முன்பு திரண்டனர். அப்போது நகை கடை மூடப்பட்டு இருந்தது. பராமரிப்பு பணி காரணமாக கடை மூடப்பட்டு இருப்பதாக கடையின் முன்பு அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நகைக்கடை ஊழியர்களை தொடர்பு கொண்டு பேசினார்கள். சிலர் நீண்ட நேரம் தொடர்பு கொண்ட பிறகும் போனை எடுக்கவில்லை. ஒரு சில வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டபோது போனை எடுத்து நகைக்கடை பராமரிப்பு பணி நடைபெறுவதால் மூடப்பட்டு இருப்பதாகவும், அடுத்த வாரம் திறக்கப்பட்டதும் உங்களுக்குரிய நகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

    நகைக்கடை மூடப்பட்ட தகவல் குமரி மாவட்டம் முழுவதும் பரவியது. இதனால் பணம் கட்டிய வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் கடை முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இது பற்றி தகவல் தெரிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு திரண்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    • மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
    • மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கலந்தது

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் உள்ள மழை நீர் வடிகால்களில் வீட்டில் உள்ள கழிவு நீர் கலப்பதால் நீர் நிலைகள் பாதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கழிவு நீரை மழை நீர் வடிகாலில் கலக்காமல் இருக்க வீடுகளில் உறிஞ்சி குழாய் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் உறிஞ்சி குழாய் அமைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்திலும் வீடுகளில் இருந்து வெளியே வரும் கழிவுநீர்களை உறிஞ்சி குழாயில் விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியே வரும் செப்டிக் டேங்க் கழிவுகளை மழைநீர் வடிகாலில் விட்டால் அந்த வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் மீனாட்சி புரத்தில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் செப்டிக் டேங்க் கழிவு நேரடியாக மழை நீர் வடிகாலில் வருவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.

    அதன் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார், சுகாதார அதிகாரி ராஜாராம், சுகாதார ஆய்வாளர்கள் சத்யராஜ், பகவதி பெருமாள், மாதவன் பிள்ளை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அந்த நகை கடைக்கு வந்தனர். பின்னர் அந்த நகை கடையில் உள்ள செப்டிக் டேங்கில் இருந்து கழிவுநீர் மழை நீர் வடிகாலில் வரும் வகையில் மோட்டார் வைத்து பயன்படுத்துவதை அதிகாரிகள் பார்த்தனர்.

    இதனை தொடர்ந்து அந்த நகை கடைக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது நகைக்கடை தரப்பில் கடையில் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் வெளியேறியதும் நகையில் உள்ள நகை இருப்புகளை சரி செய்து விட்டு வெளியே வருவதாக நகைக்கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காத்திருந்தனர். பின்னர் அவர்கள் வெளியே வந்த பிறகு நகை கடைக்கு சீல் வைத்தனர். மேலும் கடைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இதனால் மீனாட்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோட்டக்குப்பம் போலீஸ் சூப்பிரண்டு சுனில், ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
    • தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

    சேதராப்பட்டு:

    புதுச்சேரி லாஸ்பேட்டை அடுத்த நாவற்குளம் முல்லை வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 46).

    இவர் கடந்த 20 ஆண்டுகளாக திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி வளாக கட்டிடத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடைக்கு நகை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் நாள்தோறும் வருவது வழக்கம். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் கடை திறக்கப்படவில்லை.

    இந்நிலையில் பள்ளியின் வளாக வீட்டில் வசித்து வருபவர்கள் இன்று அதிகாலை நகைக் கடையின் பின்பக்க சுவர் துளையிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடையின் உரிமையாளருக்கும், ஆரோவில் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கோட்டக்குப்பம் போலீஸ் சூப்பிரண்டு சுனில், ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    கடையின் உரிமையாளர் செந்தில்குமாரும் அங்கு வந்தார். நகை கடையில் பின்பக்க சுவர் துளையிட்டு இருப்பதையும் கடைக்குள் இருக்கும் நகைகள் ஏதாவது கொள்ளையடிக்கப் பட்டுள்ளதா என்பதை பார்வையிட்டனர்.

    கடையின் சுவற்றை ஆயுதங்கள் மூலம் துளையிட்ட மர்ம நபர்கள் கியாஸ் வெல்டிங் மிஷின் மூலம் கடைக்குள் இருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். லாக்கர் வலிமையாக இருந்ததால் அதனை கொள்ளையர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் கடையில் இருந்த பல கோடி மதிப்பிலான நகைகள் தப்பியது.

    இதையடுத்து தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

    இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • நகை கடையில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்
    • நகை கடையில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்.

    மதுரை

    மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    மதுரை கான்சாமேட்டு தெருவில் ராமதாஸ் மகன்கள் திருநாவுக்கரசு, பிரசன்னா மற்றும் ரத்தினம் மகன் ஜெயராமன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து "ஸ்ரீ காயத்திரி ஜூவல்லர்ஸ்" என்ற பெயரில் நகை கடையை தொடங்கினர்.

    மேற்கண்ட 3 பேரும் பொதுமக்களிடம் பல கவர்ச்சிகரமான திட்டத்தின் மூலம் நகையை முதலீடு செய்தால் அதிக வட்டி (15 சதவீதம்) தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை பெற்றனர். பின்னர் அதற்குரிய பணத் தையோ, நகைகளையோ திரும்ப தராமல் நம்பிக்கை மோசடி செய்து விட்டனர்.

    இதுகுறித்து பாதிக்கப் பட்ட புகார்தாரர் மதுரை பொருளாதார குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நிலுவை யில் உள்ளது.

    மேற்கண்ட நகை கடை யில் நகைகளை முதலீடு செய்து ஏமாந்த பொது மக்கள் அசல் ஆவணங்க ளுடன் மதுரை தபால் தந்தி நகர் விரிவாக்கம், பார்க் டவுன் பஸ் நிறுத்தம் எதிர்புறம் உள்ள மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்கலாம். அதன் பேரில் உரிய சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப் படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மொபட்டில் சோலார் நோக்கி சென்று கொண்டி ருந்தார்.
    • சாலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த சின்னி யம்பாளையத்தை சேர்ந்த வர் சதீஷ் குமார் (31). இவர் ஈரோடு பொன் வீதியில் உள்ள நகை கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று இரவு 8 மணியளவில் வேலை முடிந்து தனது மொபட்டில் சோலார் நோக்கி சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது மோள கவுண்டன் பாளையம் பகுதியை கடக்க முற்பட்ட போது சதீஷ்குமாரின் மொபட் எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சதீஷ் குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சதீஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் நரிக்குறவர்களால் நடத்தும் கடையும் ஒதுக்கப்பட்டது.
    • நறிக்குறவர் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் வணிக மையம் என்று பெயரிடப்பட்ட இந்த கடைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி காணப்படும் நரிக்குறவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குழுவாக தங்கி உள்ளனர். அவர்கள் தாங்கள் செய்யும் பாசிமணி,வளையல், செயின் உளிட்ட பொருட்களை சாலை ஓரங்கள், திருவிழாகள், பஸ் நிலையம் போன்ற இடங்களில் விற்பனை செய்வது வழக்கம்.

    இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆரத்தியின் முயற்சியால் நரிக்குறவர்களின் பொருட்களை விற்பனை செய்யவும், அதனை அனைத்து இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லவும் முயற்சி எடுத்து உள்ளார்.

    இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ரீட்ஸ் என்ற தொண்டு நிறுவனம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டம் மூலம் மணிமாலை கோர்த்தல், பட்டுநூலில் தயாரித்த வளையல், கவரிங் நகைகள், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்கள் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பொருட்களை விற்பனை செய்யும் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் நரிக்குறவர்களால் நடத்தும் கடையும் ஒதுக்கப்பட்டது. இதனை நேற்று முன்தினம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    நறிக்குறவர் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் வணிக மையம் என்று பெயரிடப்பட்ட இந்த கடைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.


    நகை கடைபோல் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் இந்த கடையில் புதிய மாடல்களில் மனதுக்கு பிடித்த வளையல், செயின்கள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த பொருட்கள் தரமானதாக பிராண்ட் நிறுவனம் போலவே காட்சி அளிக்கிறது.

    இந்த மையத்தில் பணியில் உள்ள நரிக்குற பெண்கள் கோட் அணிந்து புதிய தோற்றத்தில் விற்பனை செய்கிறார்கள். இதுவும் பொதுமக்களை மிகவும் கவர்ந்து உள்ளது.

    இதன் மூலம் கலெக்டர் ஆர்த்தியின் முயற்சியால் நரிக்குறவர்களின் பொருட்களுக்கு புதி பிராண்ட் உருவாகி இருக்கிறது. இதனால தங்களது வாழ்வாதாரம் உயரும் என்று நரிக்குறவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கடையில் மட்டும் அல்லாமல் காஞ்சிபுரத்தில் உள்ள பிரபலமான பட்டுசேலை கடைகளிலும் நரிக்குறவர்களின் உற்பத்தி பொருட்களை காட்சிபடுத்தி விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முழுக்க, முழுக்க பட்டு நூலில் செய்யப்படும் அணிகலன்கள் என்பதால்பட்டுச்சேலை வாங்குபவர்கள் இதனையும் வாங்குவார்கள் என்றனர்.

    • தஞ்சையில் தனியார் நகைக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்
    • நகை கடை உரிமையாளரும் தலைமறைவாகி விட்டார்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை நகரில் மையப்பகுதியில் தனியார் நகைக்கடை உள்ளது. இந்த கடையில் வெளியிடப்பட்ட பல்வேறு சலுகைகள் கொண்ட அறிவிப்பை நம்பி ஏராளமான பொதுமக்கள் நகைகள் அடகு வைத்தும், சீட்டில் பணம் கட்டியும் வந்தனர்.

    ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென இந்த நகை கடை மூடப்பட்டது.

    அதன் உரிமையாளரும் தலைமறைவாகி விட்டார். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று மதியம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அந்த நகைக்கடை முன்பு திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது நகைகள் மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும். கடை உரிமையாளரை பிடித்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    நீங்கள் புகார் மனுவாக கொடுங்கள் . உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

    இதனை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • நகை கடையில் தங்க சீட்டு மற்றும் சேமிப்பு திட்டம் நடத்தி வருகின்றனர்.
    • பணத்தை கேட்டு சென்றால் தகாத வார்த்தையால் பேசியும், கடையின் ஊழியர்களை வைத்து மிரட்டியும் வருகிறார்கள்

    கோவை:

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நகைக்கடையில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் மனு அளிக்க வந்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் பிரபலமான நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகை கடையில் தங்க சீட்டு மற்றும் சேமிப்பு திட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தில் நாங்கள் சேர்ந்துள்ளோம்.

    இந்த கடையின் பங்குதாரர்கள் எங்கள் கடையில் பல்வேறு திட்டங்கள் உள்ளதாகவும், மேற்படி திட்டங்களில் சேர்ந்து பயன் பெறுமாறு எங்களை நம்பிக்கையூட்டினர். இதனை நம்பி நாங்களும் அந்த திட்டங்களில் சேர்ந்து பணம் கட்டினோம்.

    ஆனால் அவர்கள் கூறியபடி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணத்தை கட்டிய பின்னரும், எங்களுக்கு நகையோ, பணத்தையோ கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டால், தருவதாகவே கூறி வருகிறார்கள். ஒரு வருடமாகியும் இன்னும் தரவில்லை.

    இந்நிலையில் பணத்தை கேட்டு நாங்கள்அனைவரும் பங்குதாரரின் வீட்டிற்கு சென்றோம். அங்கு அவர்களிடம் நாங்கள் செலுத்திய பணத்தை திருப்பி கேட்டோம். ஆனால் அவர்கள் பணம், நகையை தரமுடியாது என மிரட்டும் தொனியில் பேசினர்.

    இதுநாள் வரை பணத்தை திரும்ப கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தோம். ஆனால் தற்போது அவர்கள் கூறுவதை பார்த்தால் பணத்தை கொடுக்கமாட்டார்கள் என்பது தெரிகிறது.

    மேலும் பணத்தை கேட்டு சென்றால் தகாத வார்த்தையால் பேசியும், கடையின் ஊழியர்களை வைத்து மிரட்டியும் வருகிறார்கள். எனவே கடையின் பங்குதாரர், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர்களிடம் இருந்து நாங்கள் செலுத்திய தொகையினை திரும்ப பெற்று தந்து, அவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். 

    • நகை கடையில் 10 பவுன் திருடிய கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார்.
    • 10 பவுன் தங்க சங்கிலிகளை அபேஸ் செய்து தப்பினார்.

    மதுரை

    மதுரை கீழவாசல், லட்சுமிபுரம் தெருவைச் சேர்ந்தவர் கோபி (38). இவர் தெற்கு ஆவணி மூல வீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று காலை கோபி கடையில் இருந்தார். அங்கு வந்த ஒரு பெண் நகை வாங்குவது ேபால் பாசாங்கு செய்தார். ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பிய அந்த பெண், அங்கிருந்த 10 பவுன் தங்க சங்கிலிகளை அபேஸ் செய்து தப்பினார்.

    இரவில் நகைகளின் இருப்பை சோதனை செய்த போது 10 பவுன் நகை மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து கோபி விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். மீனாட்சி அம்மன் கோவில் போலீஸ் உதவி கமிஷனர் முத்துராஜ் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் ஜக்குபாய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நகைக்கடையில் 10 பவுன் நகையை திருடிய பெண்ணின் உருவம் தெரிந்தது. போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அனுப்பானடியைச் சேர்ந்த கல்லூரி மாணவி முத்துமீனா (23)என்பவரை கைது செய்தனர். விளக்குத்தூண் போலீசார் முத்து மீனாவிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகை கடையில் 10 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • 10 பவுன் தங்க சங்கிலிகளை அபேஸ் செய்து தப்பிச் சென்றார்

    மதுரை

    மதுரை கீழவாசல், லட்சுமிபுரம் தெருவைச் சேர்ந்தவர் கோபி (வயது 38). இவர் தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு வந்த ஒரு பெண் தங்க நகை வாங்குவது போல் ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பிய கடையில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலிகளை அபேஸ் செய்து தப்பிச் சென்றார்.

    இந்த நிலையில் கோபி நேற்று இரவு நகை இருப்பை சோதனை செய்து பார்த்தார். அப்போது கடையில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலி மாயமானது தெரியவந்தது. இதுதொடர்பாக கோபி விளக்குத்தூண் குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×